ஒலுவில் மற்றும் நிந்தவூர் பிரதேசங்களில் வசிக்கின்ற
தேவையையுடைவர்கள் பாவனைக்கு மிகவும் தேவைப்பாடாக பொதுக்கிணறுகள் மற்றும் குழாய்க்கிணறு என்பன அவசியமாக காணப்படுவதனால் அதனை அமைத்துத்தருமாரும் கல்முனை ரஹ்மத் பவுண்டேசனிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக Y.W.M.A. பேரவையின் ஒருங்கிணைப்பில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் பணிப்பின் பெயரில் மிகவும் குறுகிய நாட்களுக்குள் இப்பொதுக்கிணறுகள் அமைக்கப்பட்டு பயனாளிகள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டன.
இதன்போது கொழும்பிலிருந்து வருகை தந்த Y.W.M.A. பேரவையின் தலைவி சகோதரி பவாஸா தாஹா அவர்களும், கனடாவிலிருந்து வருகை தந்த C.S.M.W.A. பேரவையின் தலைவி சகோதரி சீனியா தாஸிம் அவர்களும் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு பயனாளர்ளிடம் இக்கிணறுகளை திறந்து கையளித்து வைத்தனர்.
மேலும் இதன்போது பயனாளிகளுடன், முக்கியஸ்தர்கள், அப்பிரதேசவாசிகள், நலன்விரும்பிகள், பவுண்டேசன் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
ஏ.எஸ்.எம்.அர்ஹம்
நிருபர்