பாதிக்கப்பட்ட சிறுமியின் அக்காவின் கணவரையே தேடிவருவதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் குறித்த சிறுமியை வீட்டுக்குதெரியாமல் கடந்த 28 ஆம் திகதி ஹட்டனுக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு தனது நண்பரின் வீட்டில் ஜூன் மாதம் 01 ஆம் திகதி வரை தங்கவைத்தே இந்த குற்றத்தைபுரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் பின்னர் குறித்த சிறுமியை அழைத்துவந்த சந்தேகநபர் அவரை வீட்டில் விட்டுவிட்டு தலைமறைவாகியுள்ளார்.வீட்டுக்கு வந்த சிறுமி தனக்கு நடந்தவற்றை பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து இதுதொடர்பில் கற்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன் சிறுமியும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
குறித்தசிறுமி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கர்ப்பமடைந்துள்ளதாகவும் வைத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே தலைமறைவாகியுள்ள சந்தேநபரான சிறுமியின் அக்காவின் கணவரை தேடி வலைவிரித்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

