மாத்தறை றத்தடுணகல பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்குள் இரவு நேரத்தில் புகுந்து அங்கு நித்திரையில் இருந்த யுவதியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயற்சித்த குற்றத்திற்காக ”மல்லி ஐயா” என்ற இளைஞரொருவரை மஹவெல பொலிஸார் கடந்த 7ஆம் திகதி கைதுசெய்துள்ளனர்.
ஆடைத் தொழிற்சாலையொன்றில் கடமையாற்றும் இந்த யுவதி மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாகவும் சந்தேகநபர் றத்தடுணகல பிரதேசத்தைச் சேர்ந்தவரெனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

