புதியவை

6/recent/ticker-posts


 

தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சர் காரைதீவுக்கு விஜயம்

தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்ச்சின் செயற்பாடுகளை அம்பாரை மாவட்டத்தில் செயற்படுத்தல் சம்பந்தமான தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சருடன் கலந்துரையாடல் ஒன்றை அம்பாரை மாவட்டத்தின் மொழிச் சங்க செயற்பாட்டு நிலையம் மற்றும் மனித அபிவித்தி ஸ்ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் காரைதீவு விபுலானந்தா ஞாபகார்த்த மணிமண்டபத்தில் காரைதீவு பிரதேசசெயலாளர் திரு.சிவ.ஜெகராஜன் தலைமையில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சர் கௌரவ வாசுதேவ நாணயக்கார அவர்கள் கலந்துகொண்டார்.

மேலும் இந்நிகழ்வில் மாவட்த்தில் உள்ள பிரதேச செயலாளர்கள் மற்றும் நிருவாக அதிதிகளுடன் பொதுமக்கள் மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டதோடு மாவட்டத்தில் உள்ள மொழிகள் சம்பந்தமான மகஜர் ஒன்றும் அமைச்சருடன் கையளிக்கப்பட்டது.