புதியவை

6/recent/ticker-posts


 

உகந்தை முருகன் ஆலயமும் பறிபோகிறது- எதிர்வரும் 23ஆம் திகதி புத்தர் குடியேறுகிறார்

அம்பாறை மாவட்டத்தில் உள்ள வரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தைமலை முருகன் ஆலயத்தில் பௌத்த விகாரையுடன் கூடிய பன்சாலை ஒன்றையும் அமைக்கவும் அங்கு அரசமரம் ஒன்றை
நாட்டவும் அம்பாறையில் அம்பாறையில் உள்ள புத்த பிக்கு ஒருவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
உகந்தை முருகன் ஆலய வளாகத்தில் எதிர்வரும் 23ஆம் திகதி பொசன் பௌர்ணமி தினத்தன்று விகாரைக்கான அடிக்கல் நாட்டுவதுடன் அரசமரம் ஒன்றையும் நாட்ட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இலங்கையில் இருக்கும் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயங்களில் உகந்தை முருகன் ஆலயமும் ஒன்றாகும். இதனை அழித்து விட்டு அங்கு பௌத்த விகாரை அமைப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த கிழக்கில் உள்ள இந்து அமைப்புக்கள் தமிழ் அரசியல்வாதிகள் சர்வமத அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் துரைரத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காம கந்தன் ஆலயமும் சிங்களவர்களின் கைகளுக்கு போய் உள்ள நிலையில் உகந்தை முருகன் ஆலயத்தையும் அபகரிப்பதற்கு பௌத்த பிக்குகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.